யாழ்ப்பாணம் – சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற வளாகத்தில் இன்று (29.10.2024) காலை முதல் பொலிஸ், மற்றும் விசேட அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்துக்கு தாக்குதல் நடத்தப்படப்போவதாக பொலிஸாரின் தொலைபேசிக்கு மர்ம நபர் ஒருவரால் தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமையவே, குறித்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவித்துள்ளன.

கடும் சோதனைகள்
இதனையடுத்து, கடும் சோதனைகளுக்கு பின்னரே நீதிமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்க பொதுமக்களுக்கு அனுமதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

By slaid

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *