Category: Blog

Your blog category

2028 ஆம் ஆண்டுக்குள் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குப் பதிலாக புதிய பரீட்சை.

பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய இன்று (10) நாடாளுமன்றத்தில், மாணவர்கள் மீதான உளவியல் அழுத்தத்தைக் குறைக்கும் நோக்கில், 2028 ஆம் ஆண்டுக்குள் தரம் 5 புலமைப்பரிசில் தேர்வுக்கு பதிலாக புதிய தேர்வை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகக் கூறினார். தற்போதைய புலமைப்பரிசில் தேர்வு…

மூதூரில் இருவர் வெட்டிக்கொலை-விசாரணைகள் தீவிரம்!!

திருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாஹா நகர் பகுதியில் இருவர் வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் இன்று (14) அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.மூதூர் தாஹா நகர் பகுதியில் சிறிதரன் தர்ஷினி என்பவருடைய வீட்டிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.…

வாகன விபத்தில் இருவர் பலி

சற்று முன் தம்புள்ளை பகமுனா வீதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். குறித்த வீதியில் பயணித்த ஜீப் வாகனம் ஒன்று மரத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் இதனால் ஜீப் வாகனத்தில் பயணித்த இருவர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது

ட்ரம்பின் அதிரடி முடிவால் பாரிய கவலையில் சுவிட்சர்லாந்து

சில குறிப்பிட்ட குற்றச்செயல்களுக்கு மரண தண்டனை விதிப்பது தொடர்பில் அமெரிக்க (America) ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) எடுத்துள்ள முடிவு குறித்து சுவிட்சர்லாந்து (Switzerland) கவலை தெரிவித்துள்ளது. காவல்துறையினர் போன்ற அரசு அதிகாரிகளை கொலை செய்தல் மற்றும் பயங்கர குற்றச்செயல்களில்…

பாதாள உலகக்குழு உறுப்பினரான கனேமுல்ல சஞ்சீவ

🛑பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியதாக 2019 ஆண்டளவில் கைது செய்யப்பட்ட பிரபல பாதாள உலகக்குழு உறுப்பினரான கனேமுல்ல சஞ்சீவ அல்லது’ மாலிங்கமுவே சஞ்ஜீவ ‘ எனப்படும் சஞ்சீவ குமார சமரரத்ன கொழும்பு பிரதான நீதவான்…

✍️மீண்டும் ஆரம்பம்…

காங்கேசன்துறை நாகப்பட்டினம் இடையிலான பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவையானது எதிர்வரும் 22.02.2025 மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சிவகங்கை கப்பல் சேவை நிறுவனத்தின் தலைவர் சுந்தரராஜ் பொன்னுசாமி தெரிவித்துள்ளார். எதிர்வரும் 22.02.2025 அன்று காலை 7.30 மணியளவில் நாகப்பட்டினத்தில் இருந்து பயணத்தை ஆரம்பிக்கும் கப்பலானது…

வாகன விபத்து மூதூரில்

திருகோணமலை -மட்டக்களப்பு பிரதான வீதியின் மூதூர் பொலிஸ் பிரிவில் உள்ள இருதயபுரம் பகுதியில் பாதையைவிட்டு விலகி சிறிய ரக வேன் புரண்டு விபத்துக்குள்ளானதில் குறித்த வாகனத்தில் பயணித்த மூவர் சிறிய காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர். இச்சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை (19) இடம்பெற்றுள்ளது.…

உலகின் சக்திவாய்ந்த கடவுச்சீட்டு – இலங்கைக்கு கிடைத்துள்ள இடம்உலகின் சக்திவாய்ந்த கடவுச்சீட்டுகள் பட்டியலில் சிங்கப்பூர் முதலாவது இடத்தைப் பிடித்துள்ளது.

உலகளவில் சக்திவாய்ந்த கடவுச்சீட்டு குறித்த தரவரிசையை ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் வெளியிட்டுள்ளது. சர்வதேச விமான போக்குவரத்து சங்க தரவுகளின் அடிப்படையில் கடவுச்சீட்டுகள் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் பட்டியலில் இலங்கை 95 ஆவது இடத்தைப் பிடித்துள்ளதுடன், 44 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கும் அனுமதியையும்…

Google: முன்னாள் ஊழியரை மீண்டும் பணியமர்த்த ரூ.22,000 கோடி கொடுத்த கூகுள் – யார் இந்த NOAM SHAZEER?

AI உலகில் நோம் ஷஜீர் மிகப் பிரபலமானவர். 48 வயதான நோம் ஷஜீர் (NOAM SHAZEER) கடந்த 2000ம் ஆண்டு கூகுளில் மென்பொருள் பொறியாளராக சேர்ந்தார். இவர் தனது சக ஊழியர் டேனியல் டி ஃபிரேடோஸூடன் (DANIEL DE FRATOS) சேர்ந்து…

யாழ் சாவகச்சேரி நீதிமன்ற வளாகத்தில் குவிக்கப்பட்டுள்ள விசேட அதிரடிப் படையினர்

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற வளாகத்தில் இன்று (29.10.2024) காலை முதல் பொலிஸ், மற்றும் விசேட அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்துக்கு தாக்குதல் நடத்தப்படப்போவதாக பொலிஸாரின் தொலைபேசிக்கு மர்ம நபர் ஒருவரால் தகவல் வழங்கப்பட்டுள்ளது.…