2025 இந்தியன் பிரீமியர் லீக் தொடரானது அடுத்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தொடருக்கான மெகா ஏலம் வரும் நவம்பர் மாதம் மூன்றாவது வாரத்தில் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தனது கிரிக்கெட் வாழ்க்கை குறித்து ஓர் முக்கிய கருத்தை கூறியுள்ளார்.

அதில், T20 உலகக்கோப்பை அணியில் இடம்பெற ஜடேஜா, துபேக்கு அதிக வாய்ப்பு இருந்ததால், கடந்த ஐபிஎல் சீசனில் அவர்களுக்கு CSK – வில் முன் வரிசையில் வாய்ப்பு தரப்பட்டது. நான் பின் வரிசையில் ஆடினாலும் அணியினர் மகிழ்ச்சியாகவே இருந்தனர். அடுத்த சில வருடங்களுக்கு விளையாட்டை அனுபவிக்க விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார். இதை வைத்து பார்க்கும் பொழுது தோனி உறுதியாக 2 அல்லது 3 IPL தொடர்களில் விளையாடுவார் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

By slaid

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *